2 லட்சம் முதல் 30 லட்சம் வரையில்… விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த உதவி தொகைகள்.!

Published by
மணிகண்டன்

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

தமிழக விளையாட்டு துறை தற்போது திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவி திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களை அரசு நேற்று வெளியிட்டுள்ளது. மூன்று பிரிவுகளின் கீழ் இந்த உதவி தொகையானது வழங்கப்பட உள்ளது.

முதலில் தலை சிறந்த வீரர்களுக்கு சிறப்பு உதவி தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு மட்டும்) என்று, அவர்களுக்கு அதிகபட்ச உதவி தொகை ஒரு ஆண்டுக்கு 30 லட்சம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் 25 நபர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

[Image source : Sun News]
இரண்டாவது பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கு ஊக்குவிக்கும் திட்டம். இதில் அதிகபட்சமாக 75 நபர்களுக்கும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 12 லட்சம் வரையில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இறுதியாக வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம். இதில் அதிகபட்சம் 100 நபர்கள் மற்றும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in அதன் மூலம் தங்களது விண்ணப்பங்களை 5.5.2023 முதல் 20.5.2023 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 95140 00777 மற்றும் 78258 83865 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

13 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

14 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

15 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

15 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

16 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

17 hours ago