[Image source : tnathleticassociation]
விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக விளையாட்டு துறை தற்போது திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவி திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களை அரசு நேற்று வெளியிட்டுள்ளது. மூன்று பிரிவுகளின் கீழ் இந்த உதவி தொகையானது வழங்கப்பட உள்ளது.
முதலில் தலை சிறந்த வீரர்களுக்கு சிறப்பு உதவி தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு மட்டும்) என்று, அவர்களுக்கு அதிகபட்ச உதவி தொகை ஒரு ஆண்டுக்கு 30 லட்சம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் 25 நபர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
இறுதியாக வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம். இதில் அதிகபட்சம் 100 நபர்கள் மற்றும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in அதன் மூலம் தங்களது விண்ணப்பங்களை 5.5.2023 முதல் 20.5.2023 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 95140 00777 மற்றும் 78258 83865 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…