MK Stalin [Image source : PTI]
தேசிய சராசரியை விட ஊரக பகுதிகளுக்கு கூடுதல் மின்சாரம் வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர்.
தமிழகத்தில் கடந்த 2021 – 2022 காலகட்டத்தில் ஊரக பகுதிகளில் வழங்கப்படும் மின் விநியோக சராசரியானது 22 மணிநேரம் 15 நிமிடங்களாக பதிவாகியுள்ளது. இது தேசிய அளவில் ஊரக பகுதிகளில் வழங்கப்படும் மின் வழங்கல் சராசரியை விட அதிகமாகும்.
இதனை குறிப்பிட்டு, மத்தியஎரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் என தமிழக மின்சாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2021-2022 காலகட்டத்தில் தேசிய அளவில் ஊரக பகுதிகளில் வழங்கப்படும் மின் விநியோக சராசரியானது 20 மணிநேரம் 53 நிமிடங்களாக இருக்கிறது. அனால் தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கு மின் விநியோக சராசரியானது 22 மணிநேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதற்கு பாராட்டுக்கள் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் எனவும்,
அடுத்ததாக, தமிழக ஊரக பகுதிகளுக்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்கு உதவுதாகவும் மத்திய எரிசக்திதுறை அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதியளித்துள்ளார் என மின்சாரத்துறை வெளியீட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…