முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம். வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முழு ஊரடங்கு அமல்ப்படுத்தியது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.
அதன் பின் பேசிய அவர், மே 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்தோம். ஆனால் மக்கள் சிலர் இந்த தளர்வுகளை பயன்படுத்தி வெளியில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தனர். எனவே தான் தற்போது தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளோம். கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு தவிர வேறு வழியில்லை. கொரோனா தானாக பரவுவதில்லை. மனிதர்கள் மூலமாக தான் பரவுகிறது. அத்தகைய மனிதர்களாக யாரும் இருக்கக்கூடாது.
யாருக்கும் கொரோனா வைரஸை பரப்பவும் மாட்டேன். மற்றவர்களிடம் இருந்து இந்த வைரஸை வாங்கவும் மாட்டேன் என பொதுமக்களாகிய நீங்கள் உறுதி எடுக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பல மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தொட்ட பின் தற்போது அதன் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் தற்போது தான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மக்களின் தேவை இல்லாத வெளி நடமாட்டம் தான்.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்திய பின் சிறிதளவு தொற்று குறைந்துள்ளது. ஆனால் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. முழு ஊரடங்கு ஒரு கசப்பு மருந்து தான். ஆனால் அனைவரும் அதை அருந்தி தான் ஆக வேண்டும். நாட்டு மக்களை கெஞ்சி கேட்கிறேன். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். மருத்துவ தேவைகளுக்காக மட்டும் வெளியில் வெளியில் செல்லுங்கள்.
எங்களது இலக்கு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது. இன்னொன்று தொற்றால் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுப்பது தான். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காக தான் கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறு குறு நிறுவனங்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ டாக்ஸி உரிமையாளர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். இந்த ஒரு வாரம் முழு ஊரடங்கை நாட்டு மக்கள் அனைவரும் தவறாது கடைபிடித்தால் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் சகோதரனாக உங்களில் ஒருவனாக கேட்டுக்கொள்ளுகிறேன் முக கவசத்தை முழுமையாக அணியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…