முழு ஊரடங்கு ஒரு கசப்பு மருந்து தான்…! ஆனால் அனைவரும் அருந்தி தான் ஆக வேண்டும்…! வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Published by
லீனா

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம். வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முழு ஊரடங்கு அமல்ப்படுத்தியது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.

அதன் பின் பேசிய அவர், மே 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்தோம். ஆனால் மக்கள் சிலர் இந்த தளர்வுகளை பயன்படுத்தி வெளியில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தனர். எனவே தான் தற்போது தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளோம். கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு தவிர வேறு வழியில்லை. கொரோனா தானாக பரவுவதில்லை. மனிதர்கள் மூலமாக தான் பரவுகிறது. அத்தகைய மனிதர்களாக யாரும் இருக்கக்கூடாது.

யாருக்கும் கொரோனா வைரஸை பரப்பவும் மாட்டேன். மற்றவர்களிடம் இருந்து இந்த வைரஸை வாங்கவும் மாட்டேன் என பொதுமக்களாகிய நீங்கள் உறுதி எடுக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. பல மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தொட்ட பின் தற்போது அதன் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் தற்போது தான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மக்களின் தேவை இல்லாத வெளி நடமாட்டம் தான்.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்திய பின் சிறிதளவு தொற்று குறைந்துள்ளது. ஆனால் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. முழு ஊரடங்கு ஒரு கசப்பு மருந்து தான். ஆனால் அனைவரும் அதை அருந்தி தான் ஆக வேண்டும். நாட்டு மக்களை கெஞ்சி கேட்கிறேன். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். மருத்துவ தேவைகளுக்காக மட்டும் வெளியில் வெளியில் செல்லுங்கள்.

எங்களது இலக்கு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது. இன்னொன்று தொற்றால் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுப்பது தான். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காக தான் கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறு குறு நிறுவனங்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ டாக்ஸி உரிமையாளர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். இந்த ஒரு வாரம் முழு ஊரடங்கை நாட்டு மக்கள் அனைவரும் தவறாது கடைபிடித்தால் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் சகோதரனாக உங்களில் ஒருவனாக கேட்டுக்கொள்ளுகிறேன் முக கவசத்தை முழுமையாக அணியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

33 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

46 minutes ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

58 minutes ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

1 hour ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

2 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago