கொரோனா வைரஸ் இந்தியாவில் 110 பேரை தாக்கி உள்ளது.மேலும் இரண்டு பேர் இறந்துள்ளனர்.இதனால் மத்திய ,மாநில அரசுகள் பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் அனைவரும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து ரயில் பெட்டிகளிலும் , பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
அதில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் கம்பளி போர்வைகள் கேட்டால் மட்டுமே கொடுக்கப்படும் என கூறியுள்ளது. ரயில்வே வாரிய அறிவுறுத்தல்படி ஏசி பெட்டிகளில் கம்பளி போர்வை வழங்குவது நிறுத்தி வைக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும்.
பயணிகள் கேட்டால் மட்டுமே கம்பளி போர்வை வழங்கப்படும். இது தொடர்பாக அனைத்து பயணிகளுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…