#Breaking:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது – முதல்வர் சார்பில் அசத்தலான பரிசு!

Published by
Edison

மதுரை:உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.இதனையடுத்து,ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

700 காளைகள்,300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்,முனியாண்டி கோயில் காளை உள்ளிட்ட கிராம கோயில் காளைகள் வடிவாசலில் முதலில் அவிழ்த்து விடப்பட்டதையடுத்து , போட்டி நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சார்பில் ஒரு சொகுசு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.மேலும்,இப்போட்டியில் வெல்லும் சிறந்த மாடுபிடி வீரருக்கு எம்எல்ஏ உதயநிதி அவர்கள் சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.குறிப்பாக,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள்,மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக,ஜல்லிக்கட்டு போட்டியைக் காண 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே சமயம்,போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள்,போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

7 minutes ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

41 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

3 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago