வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை – லதா ரஜினிகாந்த்

Published by
பாலா கலியமூர்த்தி

ஆஸ்ரம் பள்ளி வளகத்துக்கான வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை என்று லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம்.

லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னை கிண்டி பகுதியில் நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளி, வாடகை பாக்கி தொடர்பாக பிரச்சினை நீடித்த வந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தை காலி செய்வதாக ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது. இதற்கான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

கொரோனா காரணமாக பள்ளியை மாற்ற முடிவில்லை என்றும் மேலும் ஓர் ஆண்டு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி சங்கத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி விவகாரத்தில், அந்தப் பள்ளியை 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பள்ளி தற்போதைய முகவரியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தடை விதித்தது.

இந்நிலையில், ஆஸ்ரம் பள்ளி வளகத்துக்கான வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை. கொரோனா காரணமாக ஏப்ரல் 2020 காலக்கெடுவுக்குள் வேறு இடத்துக்கு பள்ளியை மாற்ற முடியவில்லை. எங்கள் மனுவை ஏற்று ஏப்ரல் 2021 வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது என்று லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கமளித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…

19 minutes ago

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

52 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

2 hours ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

2 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

3 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

4 hours ago