அறநிலையத்துறை விவகாரம் : விசிக ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பங்கேற்பு.! திருமாவளவன் தகவல்.!

Published by
மணிகண்டன்

அறநிலையத்துறை விவகாரம் தொடர்பாக விசிக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பங்கேற்கிறார் என திருமாவளவன் கூறியுள்ளார். 

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய திருமாவளவன் நான் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக முதன்மை செயலர் துரை வைகோவுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன் என குறிப்பிட்டார்.

மேலும் பேசிய திருமாவளவன், தற்போது திராவிட இயக்கத்தின் போர்வாள் என்றால் அது வைகோ தான். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வைகோ விளங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக துரை வைகோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மக்கள் பக்கம் நிற்க்கும் மதிமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் உற்ற துணையாக இருப்போம் என குறிப்பிட்டார்.

தமிழகத்தில், அரநிலையத்துறை கட்டுப்பாட்டில் 43 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அங்கெல்லாம், ஒரு ஆதிதிராவிடர், ஒரு பெண் இருக்கும் வகையில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட வேண்டும் என சட்டம் இருகிற்து. அதனை உடனாடியாக நிறைவேற்ற வேண்டும் என விசிக சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதில் புதிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்கிறார். மக்களின் நீண்ட கால சிக்கல்களைசீர் செய்யும் அரசாக திமுக விளங்குகிறது. அதனால் திமுக அரசு, இந்த கோவில் பிரச்னையையையும் தீர்க்கும் என திமாவளவன் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

17 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

18 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

53 minutes ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

18 hours ago