இது கோழைத்தனமான காரியம்..! பிளாக்மெயில் கேங்கின் மலிவான அரசியல் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published by
பாலா கலியமூர்த்தி

கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என அமைச்சர் விளக்கம்.

தமிழக அரசின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசின் ஊழல் குறித்து பேசியதான ஆடியோ ஒன்றை சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் பெயர் அடிபட்டது. இந்த ஆடியோ திமுகவில், அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அமைச்சர் அறிக்கை:

எங்களுக்குள் விரிசலை ஏற்படுத்த பிளாக்மெயில் கேங்க் ஒன்று மலிவான அரசியல் ஈடுபடுகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் குறித்தோ, அமைச்சர் உதயநிதி குறித்தோ, தாம் எதுவும் தவறாக பேசவில்லை. நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

கோழைத்தனமானது:

திமுக அரசின் சாதனைகளை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாததால் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றன. அடுத்த தலைமுறையின் நம்பிக்கையாக விளங்கும் உதயநிதிக்கு மக்கள் ஆதரவும் இருக்கிறது. எனவே, நான் பேசியதாக பொய்யான ஆடியோ வெளியிட்டது கோழைத்தனமானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆடியோ வெளியிட்ட நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

திராவிட மாடல்:

மேலும், திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்?, நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் சபரீசன் அவர்கள். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை.

பிளாக் மெயில் கும்பல்:

எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல்.

ஒருபோதும் வெற்றி பெறாது:

ஆனால், இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. திமுக  தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

15 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

39 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

1 hour ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago