இந்த செய்தி என் குடும்பத்தையும், என்னையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது – செல்லூர் ராஜு பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார்.  சென்னையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்த நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் நவமணி வேதமாணிக்கம் என்பவர், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு காரணமாக தனது தொழில் நிறுவனத்தை மூடி விட்டதாகவும், இதற்கு காரணம் அதிமுக தான் எனவும் குற்றசாட்டியதாக கூறப்பட்டது.

இந்த சம்பவங்களின் தொடர்பாக அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய செல்லூர் ராஜு, தொழிலதிபரை ஏமாற்றிவிட்டார் என செய்தி பரவியதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், தொழிலதிபரை ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று மதுரை காவல் ஆய்வாளரிடம்  புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.

இதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 40 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற மோசமான செய்தி வந்துள்ளது. என்னுடைய நேர்மை, உண்மையான பணி உள்ளிட்டவற்றை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த செய்தி உள்ளது. இந்த மோசமான செய்தி என் குடும்பத்தையும், என்னையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. 10 ஆண்டு காலம் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்துள்ளேன்.

அதனால் என்னுடைய நேர்மையையும், நாணயத்தையும் வேறு ஒருவர் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யார், யார் என்னை பற்றி செய்தி வெளியிட்டார்களோ அவர்கள் மீது புகார் கொடுத்துள்ளேன். தேர்தல் நேரத்தில் இதுபோன்று புகார் கூறப்பட்டுள்ளதில் ஏதோ பின்புலம் உள்ளதாக தெரிகிறது. இது முழுக்க தனது உரிமையை பாதித்த விஷயமாகும். எனவே, தன் மீது தேவையற்ற அவதூறுகளை பரப்பி, பொது வாழ்க்கைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்த நிலையில், இது குறித்து புகார் அளித்துள்ளேன் என கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

2 hours ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

3 hours ago

ப்ளீஸ் பாலோவ் பண்ணாதீங்க…விஜய் வைத்த வேண்டுகோளை மீறும் த.வெ.க தொண்டர்கள்!

மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

3 hours ago

முக்கியமான நேரத்தில் பஞ்சாப்புக்கு பெரிய அடி? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய க்ளென் மேக்ஸ்வெல்!

பஞ்சாப் :  ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…

3 hours ago

கம்பேக் கொடுத்தாரா சூர்யா? ரெட்ரோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…

4 hours ago