இந்த செய்தி என் குடும்பத்தையும், என்னையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது – செல்லூர் ராஜு பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார்.  சென்னையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்த நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் நவமணி வேதமாணிக்கம் என்பவர், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு காரணமாக தனது தொழில் நிறுவனத்தை மூடி விட்டதாகவும், இதற்கு காரணம் அதிமுக தான் எனவும் குற்றசாட்டியதாக கூறப்பட்டது.

இந்த சம்பவங்களின் தொடர்பாக அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய செல்லூர் ராஜு, தொழிலதிபரை ஏமாற்றிவிட்டார் என செய்தி பரவியதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், தொழிலதிபரை ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று மதுரை காவல் ஆய்வாளரிடம்  புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.

இதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 40 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற மோசமான செய்தி வந்துள்ளது. என்னுடைய நேர்மை, உண்மையான பணி உள்ளிட்டவற்றை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த செய்தி உள்ளது. இந்த மோசமான செய்தி என் குடும்பத்தையும், என்னையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. 10 ஆண்டு காலம் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்துள்ளேன்.

அதனால் என்னுடைய நேர்மையையும், நாணயத்தையும் வேறு ஒருவர் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யார், யார் என்னை பற்றி செய்தி வெளியிட்டார்களோ அவர்கள் மீது புகார் கொடுத்துள்ளேன். தேர்தல் நேரத்தில் இதுபோன்று புகார் கூறப்பட்டுள்ளதில் ஏதோ பின்புலம் உள்ளதாக தெரிகிறது. இது முழுக்க தனது உரிமையை பாதித்த விஷயமாகும். எனவே, தன் மீது தேவையற்ற அவதூறுகளை பரப்பி, பொது வாழ்க்கைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்த நிலையில், இது குறித்து புகார் அளித்துள்ளேன் என கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

13 minutes ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

55 minutes ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

1 hour ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

2 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

3 hours ago