திருப்பூர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தற்கொலை!

Published by
பாலா கலியமூர்த்தி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை.

திருப்பூர் மாநகராட்சி 36-ஆவது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மணி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. தேர்தல் செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 ஓட்டுகள் மட்டும் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறவில்லை என்பது கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் களம் இறங்கினர்.

இதுவும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்தில கூட வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் களத்தில் நின்று வேட்பாளர்களுக்கு வேதனை அளித்தது. இந்த வேதனையில் வேட்பாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

16 minutes ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

40 minutes ago

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

2 hours ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

3 hours ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

4 hours ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

4 hours ago