#Breaking:பிரதமரே…இதனை தடுக்க நடவடிக்கை எடுங்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Published by
Edison

சென்னை:இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 105 மீன்பிடிப் படகுகளை,இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை 7-2-2022 முதல் 11-2-2022 வரை ஏலம் விட அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்தும்,இலங்கை அரசின் இந்தச் செயலை உடனடியாக நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,”மீன்பிடித்தல் இந்திய-இலங்கை கூட்டுப் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் பணிக்குழுவானது தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு துரதிஷ்டவசமானது எனவும்,நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்கள் மத்தியில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,இலங்கை அரசால் 2018 ஆம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுதுபார்க்க இயலாதெனக் கருதப்படும் 125 தமிழகப் படகுகளை ஒளிவுமறைவற்ற  வெளிப்படைத்தன்மையுடன்  மத்திய அரசு அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர வேண்டும் என்றும்,இலங்கை கடற்படையினரால் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிடவேண்டும் என்றும்  முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

 

Recent Posts

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…

4 hours ago

11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!

பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…

5 hours ago

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!

விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…

5 hours ago

கொரோனா பரவல்: ”கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும்” – பொது சுகாதாரத்துறை.!

சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…

6 hours ago

அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…

6 hours ago

ஒரே ஒரு ஆட்டோ மாசம் ஓஹோ சம்பாத்தியம்.., லட்சம் வருமானம் பார்க்கும் ஓட்டுநர்.! அப்படி என்ன செய்கிறார்?

மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…

7 hours ago