Ramadoss [Image-Representative]
டிஎன்பிஎஸ்சி-யை பிரித்து புதிதாக மற்றொரு தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்திற்கு ராமதாஸ் கண்டனம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி மூலம், தமிழ்நாட்டில் அரசுப்பணிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வுகள் வைத்து தேர்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், புதிதாக மற்றொரு தேர்வு வாரியம் தேவையில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)-ஐ இரண்டாகப் பிரித்து சார்புநிலைப் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய புதிதாக இன்னொரு தேர்வாணையத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசுப்பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச்செய்யும் இந்த ஆலோசனை குறித்து தான் அதிர்ச்சியடைந்ததாக ராமதாஸ் மேலும் கூறினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிக்கலின்றி செயல்பட்டு வரும் நிலையில் புதிய தேர்வு வாரியம் அமைப்பது குறித்து அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்த உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் வரும் மே 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் செயலுக்கு வந்தால் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுக்கு 500க்கும் குறைவான பணிகள் மட்டுமே நிரப்பப்படும் எனவே, அரசு இந்த திட்டத்தினைக் கைவிடவேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…