தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு.! ஆற்றங்கரைக்கு செல்ல ஆட்சியர் தடை.!

Published by
மணிகண்டன்

நாளை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் தூத்துக்குடி மக்கள் யாரும் செல்லக்கூடாது என தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் / கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர்.

தாமிரபரணி ஆற்று பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு – பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகமாகி உள்ளது. ஆதலால் சேர்வலாறு – பாபநாசம் பகுதியில் நீர் திறப்பது 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தற்போது வரும் 2500 கனஅடி நீரானது நாளை 15 ஆயிரம் கனஅடி நீராக அதிகரிக்கப்பட உள்ளது.

நாளை காலை தூத்துக்குடி மாவட்டம் மருதூரில் இந்த 15 ஆயிரம் கனஅடி நீர் தூத்துக்குடி மாவட்டம் மருதூரில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியான மருதூர், அகரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், முக்காணி ஆகிய பகுதிகளில் ஆற்றங்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீந்துவதற்கோ, மீன் பிடிப்பதற்கோ அல்லது வேறு எந்த வேலை செய்யவோ நாளை தாமிரபரணி ஆற்றங்கரை பக்கம் யாரும் செல்லக்கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் / காவல் கண்காணிப்பாளர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

18 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

57 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago