நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் சென்ற பயணிகள் ரயில் இன்று காலை சரியாக 6:10 மணிக்கு சீர்காழியை கடந்த போது ரயில் பாதையில் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து ரயில் டிரைவர் சீர்காழி ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் 6: 35 மணிக்கு வந்த திருச்செந்தூர் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ரயில்வே பொறியாளர் மற்றும் ஊழியர்கள் ரயில் பாதையை சோதனையிட்ட போது பாதரக்குடி என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. நீண்டநேரம் கடுமையாக போராடி ஊழியர்கள் அந்த விரிசலை சரிசெய்தனர். இதையடுத்து ஒரு மணிநேரம் தாமதமாக 6:40 மணிக்கு திருச்செந்தூர் விரைவு ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் இன்றி தடுக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…