சிறுமி எரித்து கொன்ற வழக்கு.. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

Published by
Surya

திருச்சியில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் மகள், கங்காதேவி. 14 வயதாகும் அந்த சிறுமி, நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறதாக திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் கூறினார். அதுமட்டுமின்றி, சிறுமி எரிந்து கிடந்த இடத்தை காட்டிய 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனவும் தெரியவந்தது.

இந்நிலையில், சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து இந்த விசாரணையை தொடங்கியது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 6 தொடர் பாலியல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகவும், 6-வது முறையாக தாமாக முன்வந்து இந்த விசாரணையை தொடங்குவதாகவும் கூறியுள்ளது.

Published by
Surya

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

2 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago