‘அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை’ – டிடிவி தினகரன் தீபாவளி வாழ்த்து!

Published by
Edison

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 4 ஆம் தேதியான நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப் படவுள்ளது.இதனை முன்னிட்டு நேற்று சசிகலா,அதிமுக பொதுசெயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில்,மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாளான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாளான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆணவமும், அகங்காரமும் அழிந்து, மகிழ்ச்சியும் நிம்மதியும் மக்களிடம் தழைத்திட வேண்டும் என்பதுதான் தீப ஒளி திருநாளின் அடிப்படை தத்துவமாகும். ‘அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை’ என்பதை உலகுக்கு உணர்த்தும் இந்த நன்னாளில், தீமைகள் அனைத்தும் விலகி, தர்மம் செழிக்க வேண்டும். ஒவ்வொருவரின் வீடுகளிலும் ஆரோக்கியமும், அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும். கொரோனா பெருந்துயரில் இருந்து முழுமையாக மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விரைவில் நனவாகட்டும். வலி தந்த இழப்புகள் மாறி, வலிமையையும் வளங்களையும் இத்திருநாள் கொண்டு வரட்டும். அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

17 minutes ago

பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் போர் நிறுத்தம் – அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…

1 hour ago

விஜய் தலைமையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

பிரதமர் கிட்ட நான் பேசிய பிறகு தான் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தப்பட்டது – இபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…

2 hours ago

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

4 hours ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

5 hours ago