தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடியில் ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்!

Published by
லீனா

தமிழகத்தில் முதன்முறையாக, தூத்துக்குடியில் ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க,  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வெளியில் வரும் போது, கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடியில், ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பதாகவும், அரசு மருத்துவமனைக்கு முன்பதாகவும் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த இயந்திரத்தில் ரூ.5 செலுத்தி, முக கவசத்தை பெற்று செல்கின்றனர். இந்த இயந்திரத்தின் மூலம், ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட முக கவசங்களை மக்கள் பெற்று செல்வதாக கூறுகின்றனர். 

இதே முக கவசத்தை நாம் வெளியில் உள்ள மருந்து கடைகளில் வாங்கினால், ரூ.10-20 வரை விற்பனை செய்யப்படுகிற நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உருவாக்கப்படுள்ள இந்த முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Published by
லீனா

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

9 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago