செங்கல்பட்டு பாமக நிர்வாகி வெட்டி படுகொலை.! சுட்டுப்பிடித்த காவல்துறை.. இருவர் கைது.!

Published by
மணிகண்டன்

செங்கல்பட்டில் பாமக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாமக நகர செயலாளர் நாகராஜ் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் தாக்கப்பட்டதை கண்டதும், அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

நாகராஜ் உயிரிழப்பை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது, பாமக கட்சியினர் மற்றும் உறவினர்கள் , நாகராஜை கொலை செய்த்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

நேற்று இரவு முதலே தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட காவல்துறையினர் அஜய் என்பவரை சுட்டுப்பிடித்துள்ளனர். காவல்துறையினர் அஜய்யை பிடிக்க முயலுகையில் கூறிய ஆயுதங்களால் காவல்துறையினரை அஜய் தாக்க முற்பட்டதாக தெரிகிறது. இதனால் தற்காப்புக்காக அஜய் காலில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.   தற்போது அஜய்க்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை வழக்கில் தற்போது கார்த்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாமக நிர்வாகி படுகொலையை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்ப்பட்டுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…

12 hours ago

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…

12 hours ago

“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!

ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு 6.5 ஆண்டுகள்…ஞானசேகரன் வழக்கில் 157 நாளில்..இபிஸ்க்கு கனிமொழி பதிலடி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

14 hours ago

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

17 hours ago

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

18 hours ago