UdhayanidhiStalin: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் இன்று இந்தி தினமான ‘இந்தி திவாஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்தி நிவாஸ் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹிந்தி பற்றிய பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளமான X தளத்தில் வீடியோ வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தார். அதில் அவர் பேசுகையில், இந்தி மொழி இந்தியாவில் உள்ள எந்த மொழிகளுடனும் போட்டியிட்டதில்லை. போட்டியிடவும் போவதில்லை.

அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் ஒரு வலுவான நாடு உருவாகும். அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரம் அளிக்கும் மையமாக இந்தி மாறும். இந்தியா பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒன்றிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. இது பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் பல உலகளாவிய மொழிகளைக் கௌரவித்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தின் கடினமான காலங்களில் நாட்டை ஒன்றிணைப்பதில் இந்தி மொழி மிக முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தி, தகவல் தொடர்பு மொழியாக, இருந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தை கிழக்கிலிருந்து மேற்காகவும், வடக்கிலிருந்து தெற்காகவும் முன்னெடுத்துச் செல்வதில் இந்தி முக்கியப் பங்காற்றியுள்ளது.

1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டக் கலைஞர்களால் இந்தி மொழி அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்பின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய மற்றும் உலகளாவிய மையங்களில் இந்திய மொழிகளுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைத்துள்ளது என பல்வேறு கருத்துக்களை இந்தி மொழி சார்ந்து பேசியுள்ளார்.

இந்த நிலையில், இந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது, பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார்.

இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ், கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

8 hours ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

9 hours ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

10 hours ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

10 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

11 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

13 hours ago