முத்தமிழறிஞரின் இறப்புக்கு பிறகும் அவரின் எழுத்தைத் தொகுக்கும் பணியில் அயராது ஈடுபட்டிருந்த மாமா அவர்களின் உழைப்பு என்றென்றும் போற்றப்படும்.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் சண்முகநாதன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரை நூற்றாண்டு காலம் முத்தமிழறிஞர் கலைஞரின் நிழலாய் நீங்காமல் நின்று மறைந்த சண்முகநாதன் மாமா அவர்களின் உடலுக்கு மரியாதை செய்தோம். முத்தமிழறிஞரின் இறப்புக்கு பிறகும் அவரின் எழுத்தைத் தொகுக்கும் பணியில் அயராது ஈடுபட்டிருந்த மாமா அவர்களின் உழைப்பு என்றென்றும் போற்றப்படும்.’ என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…