நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!

Published by
பாலா கலியமூர்த்தி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை மக்கள் வெளியிட்டார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.

இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, பரமக்குடி, நாகை நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை (154 வேட்பாளர்கள்) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதல் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வெளியிட்டு வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை வெளியிட்டார்.

இதனிடையே, தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பிரதான கட்சிகள் ஐடா ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல் என தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

1 minute ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

1 hour ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

2 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

3 hours ago

“கட்டப்பஞ்சாயத்து செய்யவா ஓட்டு போட்டாங்க?”- பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சராமாரி கேள்விகள்.!

சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…

3 hours ago

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின்…

4 hours ago