பட்டியல் இனத்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம்.. அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை.!

Published by
மணிகண்டன்

ஆதிதிராவிடர் மீது காவல்துறை அணுகுமுறை கடுமையாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியல் இனத்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக தற்போது அந்த கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பட்டியல்இனத்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம் குறித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை அவர் முன் வைத்தார்.

திருமாவளவன் பேசுகையில், தமிழகத்தில் ஆதிதிராவிடர்களை காவல்துறையினர் அணுகும் முறை மிகவும் கடுமையாக இருக்கிறது. தலித் வீதிகளில் அவர்கள் உள்ளே சென்று தாக்குதல் நடத்துகிறார்கள். மற்ற எந்த சமூகத்தினருக்கும் இப்படி நடப்பது இல்லை. இதனை அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் முழுதாக தட்டி கழித்து விட முடியாது. அதேபோல் அவர்கள் தான் காரணம் என்று முழுதாக கூறி விடவும் முடியாது. இதனை அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைவருக்கும் வழிபாட்டு முறை இருப்பதை உறுதி செய்து, அதற்கான அறிக்கையை இந்து அறநிலையத்துறை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனை பொதுமக்கள் பார்வைக்கு முதல்வர் வெளியிட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அந்த ஆர்ப்பாட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 minutes ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

3 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

19 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago