நம்மை காக்கும் காவல் தெய்வங்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் மக்கள் இயக்க தளபதி ரசிகர்கள்…

Published by
Kaliraj

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, ஊரடங்கினைப் பொதுமக்கள் சரியாகக் கடைப்பிடிக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு உதவும்வகையிலும்  தமிழக சீர்மிகு காவல்துறையினர் 24 மணி நேரமும்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதிலும் குறிப்பாக, அவர்கள் நிம்மதியாக நல்ல உணவை உண்டு பல நாட்கள் ஆகியிருக்கலாம். ஆங்காங்கு கிடைக்கும் உணவுகளை உண்டு மக்களை பாதுகாக்கும் சிறந்த சேவையாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் காவலர்களுக்கு ஒரு நாளாவது பிரியாணி விருந்து போட வேண்டும் என்று விரும்பிய புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள 200 காவலர்களுக்கு  பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கின்றனர்.

இது என்னடா பிரியாணி பிரியர்களுக்கு ...

இதுகுறித்து கூறிய விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பர்வேஸ், கொடூரமான கொரோனாவைத் தடுக்க அரசு அறிவித்த தீவிர  ஊரடங்கைச் சரியாக கடைப்பிடிக்க வைக்க தினமும் சாலையில் நின்று  நமக்காக காவலர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்காக பிரியாணி விருந்து போடலாம்னு முடிவு பண்ணோம். இதற்காக, 200 பிரியாணி பொட்டலங்களைத் தயார் செய்து, நகர் ஸ்டேஷன், கணேஷ் நகர் ஸ்டேஷன், டிராஃபிக் போலீஸ் அலுவலகம் என காவலர்கள் இருக்கும் இடங்களுக்கு நேரடியாகப் போய் பிரியாணி பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்திட்டு வந்தோம். நமக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் அனைவரும்  முடிந்த  உதவிகளைச் செய்ய வேண்டும்  என தெரிவித்தார்.

Recent Posts

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…எமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…

20 minutes ago

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தாக்குதல் எப்படி? டிரம்பிடம் எழுந்த கேள்வி!

வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…

46 minutes ago

INDvsENG : இங்க பவுலிங்கில் நான் தான் கிங்! புதிய சாதனை படைத்த பும்ரா!

லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…

1 hour ago

ரூ 11-க்கு 10ஜிபி டேட்டா! அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த ஜியோ & ஏர்டெல்!

மும்பை :  இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…

2 hours ago

போரில் இறங்கிய அமெரிக்கா! “பெரும் அழிவு காத்திருக்கு”…ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…

2 hours ago

போரில் இறங்கிய அமெரிக்கா “ஈரான் மீது தாக்குதல்”! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…

3 hours ago