[file image]
நடிகர் விஜயின் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது என்றே கூறலாம். ஏனென்றால், சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகையை வழங்கினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், நீங்கள்தான் எதிர்கால வாக்காளர்கள். நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
காமராஜர், பெரியார், அம்பத்கர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி படிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என பெற்றோர்களிடம் கூறுங்கள் என பேசி அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் அடுத்த கட்டமாக அண்மையில், தமிழகம் முழுவதும் ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டத்தை விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
காமராஜர் மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளில் அவர்களது சிலைகளுக்கு மரியாதை செய்தல் போன்ற அரசியல் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு, நடிகர் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது. அதுவும், அவரது அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது.
இந்த சமயத்தில், அடுத்த நகர்வாக அரசியல் கட்சிகளில் உள்ளது போல் விஜய் மக்கள் இயக்கத்தில் புதிதாக வழக்கறிஞர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வழக்கறிஞர் அணியினர் ஆலோசனை நடைபெறுகிறது. இதுவரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது புதிய அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சட்ட உதவிகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் மக்கள் இயக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரிவு அணி மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…
சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…
சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின்…
அகமதாபாத் : கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத்…