மதகு உடைந்து வெளியேறிய தண்ணீர்! மணல் மூட்டைகளை வைத்து பெரிய பாதிப்பை தடுத்த இளைஞர்கள்!

Published by
மணிகண்டன்
  • விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது பெரிய ஏரி.
  • இந்த ஏரியின் முழு கொள்ளளவையும் எட்டி, அதன் மதகு ஒன்று உடைந்து விட்டது. அதனை மணல் மூட்டைகளை வைத்து இளைஞர்கள் தண்ணீர் கசிவை தடுத்து நிறுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்து உள்ள சத்தியமங்கலம் எனும் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த ஏரிதான் வாழப்பாடி, சத்தியமங்கலம், மணாலிபாடி ஆகிய சுற்றுவட்டார ஊர்களுக்கு தண்ணீர் ஆதாரமாக விளங்குகிறது. தற்போது இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த ஏரியில் நேற்று முன்தினம் இரவு அதில் உள்ள ஒரு மதகில் உடைப்பு ஏற்பட்டு, நீர் கசிந்துள்ளது. இதனை நேற்று பார்த்த ஊர்மக்கள் தண்ணீர் அதிகமாக வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு, மதகு உடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி கசிவை சரி செய்தனர்.

இதனால், நீர் வெளியேற்றம் பெரும்பான்மையாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, கிராம நிர்வாக அதிகாரியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வந்து நேரில் பார்வையிட்டு,பின்னர் ஜேசிபி எந்திரம் மூலம் ஏரியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நீர் வெளியேறுவதை கண்டு இளைஞர்கள் துரிதமாக செய்யப்பட்டதால் மதகு பெருமளவு சேதம் அடையாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

19 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago