விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்து உள்ள சத்தியமங்கலம் எனும் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த ஏரிதான் வாழப்பாடி, சத்தியமங்கலம், மணாலிபாடி ஆகிய சுற்றுவட்டார ஊர்களுக்கு தண்ணீர் ஆதாரமாக விளங்குகிறது. தற்போது இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த ஏரியில் நேற்று முன்தினம் இரவு அதில் உள்ள ஒரு மதகில் உடைப்பு ஏற்பட்டு, நீர் கசிந்துள்ளது. இதனை நேற்று பார்த்த ஊர்மக்கள் தண்ணீர் அதிகமாக வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு, மதகு உடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி கசிவை சரி செய்தனர்.
இதனால், நீர் வெளியேற்றம் பெரும்பான்மையாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, கிராம நிர்வாக அதிகாரியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வந்து நேரில் பார்வையிட்டு,பின்னர் ஜேசிபி எந்திரம் மூலம் ஏரியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நீர் வெளியேறுவதை கண்டு இளைஞர்கள் துரிதமாக செய்யப்பட்டதால் மதகு பெருமளவு சேதம் அடையாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…