[FILE IMAGE]
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக் கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், விநாயகர் சிலை ஊர்வல கொண்டாடங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று சென்னை உயர்நீதிமன்ற ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலத்திற்கும் அனுமதிகோரியும் இந்து மக்கள் கட்சி மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது.
அப்போது அவர் கூறுகையில், விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல, விநாயகர் கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? கேள்வி எழுப்பி இவை தனது சொந்தக் கருத்து மட்டுமே எனவும் நீதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தாமோதரன் வாதம் வைத்தார். இதன்பின் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைக்க அனுமதிகோரி மனுத்தாக்கல் செய்தால் ஏற்கப்படாது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…
சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத்…
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…