Anitha Radhakrishnan [File Image]
மீனவர்களுக்கான தடைகால நிவாரண உதவித்தொகை முதலமைச்சர் அறிவுரைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தகவல்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி விரைவில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், மீனவர்களுக்கான தடைகால நிவாரண உதவித்தொகை முதலமைச்சர் அறிவுரைப்படி உயர்த்தி வழங்கப்படும். இதுதொடர்பாக முதலமைச்சர் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பார். மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசை முதல்வர் வலியுறுத்துவார் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, பேசிய அமைச்சர், பசுந்தீவன உற்பத்தியை அதிகரித்து பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். மேலும், ஆவினில் ஒட்டுமொத்தமாக பால் உற்பத்தி குறையவில்லை. சில தனியார் பால் பண்ணையாளர்கள் விலை அதிகம் கொடுத்து பாலை வாங்கி வருகிறார்கள். ஆவின் நிறுவனத்தில் ஒரு தட்டுப்பாடும் இல்லை. தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்வதில் ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…