அதிமுக ஆட்சியில் வீண் செலவு.. முறையாக வீடுகள் ஒதுக்கவில்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு கடந்த அதிமுக ஆட்சி ஒரு உதாரணம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

சி.ஏ.ஜி. அறிக்கை தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியை நோக்கி வைத்துள்ளனர். அதிமுக ஆட்சியின் போது 3% மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளனர் என தெரிவித்த அமைச்சர், 2016-ஆம் அண்டு முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.

மடிக்கணினி திட்டம்:

மடிக்கணினி அதிமுக ஆட்சியில் 1.75 மாணவர்களுக்கு வழங்கவில்லை என குற்றசாட்டினார். எனவே, அதிமுக ஆட்சியில் விடுபட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 14 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்.

முறைகேடுகள்:

மேலும், 2016-2021 அதிமுக ஆட்சியில் வீடுகள் கட்டப்பட்டதில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட குறைவான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 5.09 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்:

அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர், பட்டியல் இன மக்களுக்கு வழங்க வேண்டிய 60% வீடுகளை வழங்கவில்லை. ரூ.2.18 கோடி தேவையற்ற செலவு என சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிட்டு உள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

வீண் செலவு:

தொடர்ந்த்து பேசிய அமைச்சர், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகளை, பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கியுள்ளனர். தேவையற்ற செலவுகளையே அதிமுக அரசு செய்துள்ளது என்று சிஏஜி அறிக்கை தெளிவாக காட்டியுள்ளது. அதிமுக ஆட்சியில் புத்தகப்பையில் இருந்த படத்தை மாற்ற ரூ.13 கோடி செலவாகும் என்பதால், அதை மாற்ற வேண்டாம் என்று கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி ஒரு உதாரணம் எனவும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

2 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

2 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

3 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

4 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

6 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

7 hours ago