நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுர்ஜித் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு தவறி விழுந்தான். அப்போது முதல் சிறுவனை மீட்கும் பணி 64 மணி நேரத்திற்கு மேலாக நடந்து வருகிறது.
பல முயற்சிகள் செய்தும் தோல்வியில் முடிந்த நிலையில் அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போன்ற குழி தோன்றும் பணியை ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஓஎன்ஜிசியின் ரக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் குழி தோண்டும் போது பாறைகள் குறுக்கிடுவதால் தோண்டும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. குழி தோண்டும் பணியை விஜயபாஸ்கர் தொடக்கத்தில் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் இரண்டாவது ரக் இயந்திரம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால் இயந்திரங்களாலும் குறித்த படி பள்ளம் தோண்ட முடியவில்லை. மணப்பாறையில் பாறைகள் கடினமாக உள்ளது. இவ்வளவு கடினமான பாறைகள் இதுவரை நான் பார்த்ததில்லை குழந்தையின் மேல் ஒரு அங்குலத்திற்கு மண் விழுந்துள்ளது. இதனால் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம். இதுகுறித்து துணை முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படும் என கூறியுள்ளார்.
இது வரை இரண்டு ரக் இயந்திரம் மூலம் 40 அடி மட்டுமே குழி தோண்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…