பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம் என அளித்த வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் 2-ம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. பெட்ரோல், டீசல் தேவை குறைந்துள்ளதால் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகள் விலையைஉயர்த்தி வருகின்றன.
தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100 பாயைத் தாண்டியுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைப்பதாக கூறியதை நிறைவேற்ற வேண்டும் சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டரில், தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்படி உயர்ந்து கொண்டே செல்வதால், விலைவாசியும் உயர்ந்தபடியே இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இதையெல்லாம் உணர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ‘பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம்’ என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…