10 ஆம் பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் தேதி 18 இல் நடக்கும் ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் தேதி 18 இல் நடக்கும் ஆலோசனைக்கு பின்னரே அறிவிக்கப்படும் என்று ஈரோடு அருகே கோபிசெட்டிபாளையம் நம்பியூர் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த பகுதியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை ஜாக்டோ – ஜியோ புறக்கணித்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ரிஸ்க் எடுத்து தேர்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதனிடையே, மாணவர்கள் நலன்கருதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…