தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை – தமிழக அரசு
மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்து ரயிலில் தமிழகம் வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்தாலே அறிகுறி இல்லாதவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்லும் நபர்களுக்கு அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும். அதுபோல சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம். கொரோனா சோதனை முடிவில் பாசிட்டிவ் என்று தெரிந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். நெகட்டிவ் என்று தெரிந்தால் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அலுவல் ரீதியாக பயணம் மேற்கொண்டு 3 நாட்களில் திரும்பி வந்தால் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை.
மேலும், ஒரு மண்டலங்களுக்குள் வாகனங்களில் பயணிக்க இ- பாஸ் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றோரு மண்டலத்துக்கு செல்வதற்கு இ- பாஸ் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுபோன்று ஒரு மண்டலத்தில் இருந்து மற்றோரு மண்டலத்தில் உள்ள மாவட்டத்திற்கு செல்ல இ- பாஸ் அவசியம் தேவை என்றும் மண்டலங்களுக்குள் இடையே பயணிப்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…