செல்லூர் ராஜூ ஏன் அப்படி பேசினார் என நான் தொலைபேசியில் அவரிடம் விசாரிக்கிறேன் – ஜெயக்குமார்

Published by
பாலா கலியமூர்த்தி

1000 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

ம.பொ.சியின் 118-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்.

தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தான் முடிவெடுக்கும். தேர்தல் நெருங்க நெருங்க பல கட்சிகள் எங்களுடன் வர உள்ளன. அது சஸ்பென்ஸ் என்பதால் அதையெல்லாம் சொல்ல முடியாது. மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள் அம்மாவின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அம்மா உணவகம், மினி க்ளினிக் உள்ளிட்ட நாங்கள் திட்டங்களை அழித்து வருகிறது திமுக.

இதற்கு மக்கள் தக்க பாடம் விரைவில் கொடுப்பார்கள். வேங்கைவயல் சம்பவத்தில் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, சமூகநீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை. இத்தனை மாதங்களாகியும் இன்னும் குற்றவாளியை கண்டறிய  முடியவில்லை. இப்படி இருக்கும்போது சமூக நீதி பற்றி பேசுவதாக?, அவர்களுக்கு தகுதியே இல்லை, சமூக நீதி என்றால் அதிமுகதான்.

செந்தில் பாலாஜிக்கு உண்மையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதா? என்று மக்கள் கேட்கிறார்கள் என்றும் செந்தில் பாலாஜி தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் அமலாக்கத்துறை விரைவில் பதில் சொல்லும் எனவும் கூறினார். மேலும், நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சமீபத்தில் பேசிய கருத்துக்கு பதிலளித்து பேசிய, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அடுத்த தலைமுறை விஜய்தான் என செல்லூர் ராஜூ ஏன் அப்படி பேசினார் என நான் தொலைபேசியில் அவரிடம் விசாரிக்கிறேன் என கிண்டலாக கூறினார்.

அரசியல் என்பது பெரிய சமுத்திரம், அதில் யார் வேண்டுமானாலும் குதித்து நீச்சலடித்து மேலே வரலாம். அரசியலுக்கு வருபவர்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்றார். 1000 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. திமுக போன்று மன்னர் பரம்பரை கிடையாது. அதிமுக என்பது ஜனநாயக இயக்கம் எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

12 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

13 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

13 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

14 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

14 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

15 hours ago