வெட்டுக்கிளிகள் படை தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு – தமிழக வேளாண்துறை அறிவிப்பு.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் எல்லாரும் அதிர்ந்து போயிருக்கும் நிலையில், அடுத்தடுத்து வரும் எல்லாமே சோதனைக் காலமாக இருக்கிறது. வடமாநிலத்தில் விவசாய நிலங்களை திடீரென வெட்டுக்கிளிகள் ஆக்ரமித்துள்ளது. வெட்டுக்கிளிகள் வயல்களுக்குள் புகுந்து பயிற்களை சேதம் செய்து விடும் தன்மையுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவு வரை பறக்கும் தன்மை கொண்டவை. இதனால் வடமாநில விவசாயிகள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இதனிடையே, தமிழ்நாட்டிலும் வெட்டுக்கிளிகள் படை வந்து பாதிப்பை ஏற்படுத்துமோ என அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், வெட்டுக்கிளி படையடைப்பு தக்காண பீட பூமியை தாண்டி தமிழகத்திற்கு வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு பற்றி வேளாண்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி, வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்பட்டால் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் வேளாண்துறை அறிவிறுத்தல் செய்துள்ளது. விளைப்பயிர் பாதுகாப்புகளை வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. மேலும், அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தை வான்வெளி தெளிப்பு மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று அறிவியுறுத்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…