Heavy Fever : திருச்சியில் தீவிர காய்ச்சலுக்கு ஒரு பெண் உயிரிழப்பு.!

Published by
மணிகண்டன்

திருச்சி, திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த கனகவல்லி எனும் 38வயது பெண் தீவிர காய்ச்சல் காரணமாக அப்பகுதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். நேற்று இரவு அதிக காய்ச்சல் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அவருக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை என மருத்துவர்கள் கூறிவந்தனர். இருந்தும், தீவிர காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கனகவல்லி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்று மருத்துவர்கள் கூறினாலும், எதற்காக இறந்தார் என்ற சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது . திருச்சி அரசு மருத்துவமனையில் 8 பேர் தீவிர காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை..

இதற்கு முன்னதாக திருவாரூர் அரசு மருத்துவமனையில்  காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர் சிந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதன் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . அதே போல, கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தமிழக கேரள எல்லைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

11 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

11 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

13 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

13 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

15 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

16 hours ago