Heavy Fever : திருச்சியில் தீவிர காய்ச்சலுக்கு ஒரு பெண் உயிரிழப்பு.!

Published by
மணிகண்டன்

திருச்சி, திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த கனகவல்லி எனும் 38வயது பெண் தீவிர காய்ச்சல் காரணமாக அப்பகுதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். நேற்று இரவு அதிக காய்ச்சல் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அவருக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை என மருத்துவர்கள் கூறிவந்தனர். இருந்தும், தீவிர காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கனகவல்லி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்று மருத்துவர்கள் கூறினாலும், எதற்காக இறந்தார் என்ற சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது . திருச்சி அரசு மருத்துவமனையில் 8 பேர் தீவிர காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை..

இதற்கு முன்னதாக திருவாரூர் அரசு மருத்துவமனையில்  காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர் சிந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதன் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . அதே போல, கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தமிழக கேரள எல்லைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

8 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

9 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

9 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

9 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

10 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

10 hours ago