மூன்று லட்சம் வரை கடன்களுக்கு வட்டி விகிதத்தை 12 லிருந்து 7 சதவிகிதமாக குறைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.
கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை கொள்ளை விளக்க குறிப்பை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக இருக்கும் பெண்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்க்கப்படுவர் என்று அறிவித்தார்.
மகளிர் சுய உதவி குழுக்களில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு வட்டி விகிதம் 12%ல் இருந்து 3%ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் குறைப்பின் மூலம் 3,63,881 குழுக்களை சேர்ந்த 43,39,780 உறுப்பினர்கள் பயன்பெறுவர் என்றும் குறிப்பிட்டார்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் அளவு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படும். கணவரை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்கப்படும்.
மேலும், கூட்டுறவுத்துறை தொழில்பயிற்சி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 % வட்டியில் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கூட்டுறவு துறையில் 3939 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் விரைவில் நிரப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…