மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாதை திறப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு.
சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்காக பல பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாற்றுத்திறனாளிகள் உடன் கடல் பரப்பு வரை சென்று அவர்கள் கடலில் கால் நினைப்பதை கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட தற்காலிக சிறப்பு பாதையை நிறைந்த பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள். இது புதுமையான திட்டம், அனைவராலும் வரவேற்ககூடிய திட்டம்.’ என பதிவிட்டுள்ளார்.
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…