ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.
சென்னையில் 14-ஆவது ஊதியம் ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துக்கு தொழிலாளர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார். 8 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என தொழிற்சங்கம் கோரிக்கை வைத்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.
இதுதொடர்பாக நிதித்துறையுடன் கலந்தாலோசித்து 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதன் பேசிய அவர், போக்குவரத்துத்துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவித்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…