நிவர் புயல் காரணமாக யோகா, இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைப்பு.!

Published by
Ragi

நிவர் புயல் காரணமாக நவம்பர் 27 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறவிருந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ கலந்தாய்வானது ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் ,இதனால் புதுச்சேரி கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.இது அதி தீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 140கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அப்போது நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிவர் புயல் காரணமாக பல இடங்களில் மக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் பொது விடுமுறையை அறிவித்துள்ளது.

அது மட்டுமின்றி இந்த நிவர் புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வும் ,சி.ஏ.தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தற்போது இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வானது வரும் 27-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை சென்னை அரும்பாக்கம் யோகா கல்லூரியில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் நிவர் புயல் இரவு கரையை கடந்தாலும் மழையின் தாக்கம் இருக்கும் என்பதால் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வானது தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த மேலும் தகவல்களை சுகாதாரத்துறை இணையத்தளத்தை பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Ragi

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

9 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

9 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

11 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

12 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

14 hours ago