புடிக்கலன்னா போக வேண்டியது தான.! உன்ன யாரு இழுத்து பிடிச்சா?… சி.வி.சண்முகம் காட்டம்

Published by
பாலா கலியமூர்த்தி

மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என அதிமுக எம்பி சிவி சண்முகம் பேட்டி.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தபோது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்றும் அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளதாகவும் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்து, கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். அண்ணாமலையின் கருத்தால், மீண்டும் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம், ஊழலை பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ எந்த தகுதியும் கிடையாது.

ஊழலுக்காக கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாஜக கட்சியின் தலைவர் தான். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்போதெல்லாம், அவர் ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல மாமூல் வாங்கிட்டு இருந்திருப்பாரு. 40 சதவீத கமிஷன் என்றால் பாஜக ஆட்சியில் தான். அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமித்ஷா சொல்லும்போது அண்ணாமலை அமைதியாக இருந்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அண்ணாமலை தனி நோக்கத்துக்காக செயல்படுகிறார். ஜெயலலிதாவை குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும், தராதரமும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ ஏன் கவுன்சிலராகவோ கூட அண்ணாமலை இருந்ததில்லை எனவும் கடுமையா விமர்சித்தார்.

விருப்பம் இல்லையென்றால் கூட்டணியைவிட்டு வெளியேறலாம், உனக்கு அதிமுக புடிக்கலன்னா போக வேண்டியது தான..? உன்ன யாரு இழுத்து பிடிச்சா?, ஏன் எங்களை பிடிச்சி தொங்கிட்டு இருக்க? பாஜக வேறு, அண்ணாமலை வேறு. தனி அஜெண்டாவோடு அண்ணாமலை செயல்பட்டு வருகிறார் என்றார்.

மேலும், கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடையவர்களுக்கு பதவி கொடுக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலை மீது அவர் கட்சியை சேர்ந்தவர்களே புகார் கொடுத்து வருகிறார்கள். “திமுகவின் ‘B’ டீமாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் தெரியவரும் என்றார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

32 minutes ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

14 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

14 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

16 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

16 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

17 hours ago