நீங்கள் தலைவர் என்று வேடமிட்டு நிஜத்தில் நடிக்கிறீர்கள் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
நேற்று பாஜகவில் இணைந்த குஷ்பு இன்று தமிழக பாஜகவின் தலைமை அலுவகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர வேண்டும் என்ற உறுதியோடு பாஜகவில் இணைந்துள்ளேன் .நான் இன்னமும் பெரியாரிஸ்ட் தான்.பெண்களுக்காக குரல் கொடுத்தார் பெரியார்.நான் நடிகை, படத்தில் வெளிப்படையாக நடிக்கிறேன்.நீங்கள் தலைவர் என்று வேடமிட்டு நிஜத்தில் நடிக்கிறீர்கள் என்று பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினரை விட மேல் என நினைக்கிறார்கள். அதனால்தான் எனது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கின்றார்கள். மக்களுக்கு நல்லது செய்யவே பாஜகவில் இணைந்துள்ளேன் . பதவிக்காகவோ, பேரம் பேசியோ சேரவில்லை.பாஜக -வின் நல்ல திட்டங்களுக்கு காங்கிரஸில் இருக்கும்போதே வரவேற்பு தெரிவித்துள்ளேன். காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்களை தான் பாஜக செயல்படுத்துகிறது.இரண்டு ருப்பார் வாங்கிக்கொண்டு என்னை பற்றிய வதந்தி ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர்தான்.பாஜகவில் சேர்வதற்கு எனது கணவர் காரணமில்லை.நான் அரசியலில் 10 வருடம் இருந்துள்ளேன்.எந்த அரசியல் நிகழ்ச்சியிலாவது எனது கணவரை பார்த்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .
குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…