tortoise [Imagesource : NDTV]
அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள டிகாட்டூர் மோர்கன் மருத்துவமனையில் கடல் ஆமைக்கு CT ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கெம்ப்ஸ் ரிட்லி கடல் ஆமை, அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள டிகாட்டூர் மோர்கன் மருத்துவமனையில் CT ஸ்கேன் செய்து, மருத்துவமனையில் முதல் விலங்கு நோயாளியாக மாறியது. இந்த கடலாமை 2019 இல் ஒரு மீனவரின் மீன்பிடி கொக்கியில் சிக்கியது. இதனால் ஆமையின் ஓட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் மிகவும் ஆழமான தொற்றுநோய்கு உள்ளாகியது.
இந்த ஆமையை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் டிகாட்டூரில் உள்ள குக் மியூசியம் ஆஃப் நேச்சுரல் சயின்ஸில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. காயங்கள் காரணமாக, அதை மீண்டும் கடலுக்கு அனுப்ப முடியாது சூழல் உள்ளதால், அருங்காட்சியக ஊழியர்கள் அதன் தற்போதைய மருத்துவப் பிரச்சினைகள் காரணமாக, அதற்கு வழக்கமாக சிகிச்சையளிக்கும் கால்நடை மருத்துவர் மியாமி ஹெரால்ட்டை சந்தித்த நிலையில், இந்த ஆமைக்கு CT ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில், டிகாட்டூர் மோர்கன் மருத்துவமனையில் CT ஸ்கேன் பெற்ற முதல் விலங்கு என்று காலே இன்று வரலாறு படைத்தது. CT ஸ்கேன் என்பது காலேவின் ஷெல்லின் ஆழமான நோய்த்தொற்றுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான சிறந்த கருவியாகும். இதை சாத்தியமாக்கிய டிகாட்டூர் மோர்கன் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகள் மற்றும் எங்கள் அருங்காட்சியகம் மற்றும் கால்நடை மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு பெரிய நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…