Categories: உலகம்

மன் கி பாத்தின் 100வது நிகழ்வு; யுனெஸ்கோ இயக்குனர் ஜெனரல் அனுப்பிய செய்தி.!

Published by
Muthu Kumar

பிரதமரின் மன் கி பாத் 100 வது நிகழ்வின் சிறப்பு புத்தகத்திற்கான, சிறப்பு செய்தியை யுனெஸ்கோவின் இயக்குனர் ஜெனரல் ஆட்ரி அஸூலே வழங்கியுள்ளார்.

யுனெஸ்கோவின் இயக்குனர் ஜெனரல் ஆட்ரி அஸூலே, பிரதமரின் மன் கி பாத் 100வது நிகழ்வின் சிறப்பு புத்தகத்திற்கு சிறப்பு செய்தியை வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 50க்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளில் ஓலிபரப்படும் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியானது, நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் விரும்பி கேட்கும் மற்றும் கொண்டாடப்படும் நிகழ்வாகும்.

மக்களை ஒன்றிணைக்க வானொலியின் மிகப்பெரிய சக்தி என்று “மன் கி பாத்தின்” 100வது நிகழ்வின் சிறப்புப் புத்தகத்திற்கான தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உலக வானொலி பாரம்பரிய நினைவுச்சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தவும், வானொலி மற்றும் அதன் மதிப்புகளை கொண்டாட உலக மக்கள் அனைவரையும் அழைக்கவும் இந்த புத்தகம் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இதனால் யுனெஸ்கோ ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று, உலக வானொலி தினத்தைக் கொண்டாடுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து வானொலி, நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

பாரம்பரிய AM மற்றும் FM அதிர்வெண்கள் முதல் இப்போது டிஜிட்டல் ரேடியோ, வெப் ரேடியோ மற்றும் பாட்காஸ்ட்களின் வளர்ந்து வரும் மண்டலமாக வானொலி விரிவடைகிறது என்று அவர் மேலும் அந்த  செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago