Italyfloods [Image Source : Getty Images]
இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் 14 உயிரிழந்துள்ளனர். இதனால் எமிலியா-ரோமக்னா பகுதியின் நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள தெருக்கள் முற்றிலுமாக நீரினால் சூழப்பட்டது.
மேலும், இந்த கடுமையான வெள்ளத்தால் 36,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும், இந்த வெள்ளம் காரணமாக 305க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன மற்றும் நாட்டில் 500 க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, அவசரநிலையை சமாளிக்க ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டிலிருந்து வெளியேறுவதாக நேற்று தெரிவித்தார். இத்தகைய சிக்கலான தருணத்தில் நான் இத்தாலியில் இருந்து வெகு தொலைவில் இருக்க முடியாது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…