Categories: உலகம்

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Published by
கெளதம்

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி 15 வயது சிறுவன் ஒருவர் மற்றொரு 15 வயது சிறுவனான ஆல்ஃபி லூயிஸைக் கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது ஹார்ஸ்ஃபோர்த் அருகில் உள்ள தொடக்கப் பள்ளியை விட்டு வெளியேறும் போது சக மாணவர்கள் கண் முன்னே ஆல்ஃபி லூயிஸ் இப்படி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் 7 ஆம் தேதி அன்று பிற்பகல் 3 மணி அளவில் ஹார்ஸ்போர்த்தில் உள்ள செயின்ட் மார்கரெட் ஆரம்பப் பள்ளிக்கு அருகில், பள்ளியை விட்டு வெளியேறும் பொழுது சக மாணவர்களின் கண் முன்னே ஆல்ஃபி லூயிஸ்ஸை அந்த சிறுவன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த சமையலறை கத்தியை கொண்டு ஆல்ஃபி லூயிஸ்ஸின் இதயத்தில் இரண்டு முறை குத்தி உள்ளார். மேலும், கால்களில் இரண்டு முறையும் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ஆல்ஃபி லூயிஸ் பரிதாபமாக உயிர் இழந்தார்.

மேலும், அவரது ஆல்ஃபியின் இதயத்தில் 14 சென்டிமீட்டர் ஆழமான காயம் ஏற்பட்டதால் தான் அவர் மரணமடைந்துள்ளார் என்று அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்த அந்த சிறுவனின் தரப்பில், ஆல்ஃபி லூயிஸ் என்னை தாக்கி விடுவான் என்ற அச்சத்தில் தான் இதை செய்துள்ளான் என வாதாடி உள்ளனர்.ஆனால், அதே நேரம் காவல்காவல்துறை சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் வேறு மாதிரியாக இருந்ததால் இந்த வழக்கின் அப்போது ஒத்தி வைத்தனர்.

தற்போது இந்த வழக்கில் அன்றைய தினம் ஆல்ஃபி எதுவும் செய்யவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தான் கத்தியால் குத்தினான் எனவும் அனைத்து சாட்சிகளும் நிலையாக இருந்தன. இதன் காரணமாக அந்த 15 வயது சிறுவனக்கு இந்த வழக்கில் இவர் தான் கொலையாளி என தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், ஆல்ஃபி லூயிஸ்ஸை கொன்ற அந்த கொலையாளி சிறுவனின் பெயர் விவரங்களும், மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த சிறுவனுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை விவரங்கள் எதுவும் இது வரை வெளியிடப்படவில்லை.

இந்த தீர்ப்பால் ஆல்ஃபி லூயிஸ்ஸின் குடும்பத்தினர்கள், நடுவர் மன்றத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், 15 வயதில் மரணமடைந்த ஆல்ஃபி லூயிஸ்ஸை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

Published by
கெளதம்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

2 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

2 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

3 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

4 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

5 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

5 hours ago