Categories: உலகம்

ஆர்கன்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு! 3 பேர் பலி…10 பேர் காயம்!!

Published by
பால முருகன்

அமெரிக்கா : ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்டைஸில் உள்ள மளிகைக் கடைக்கு வெளியே வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் எனவும் தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் உள்ள அவர்களின் நிலைமைகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று செய்தியாளர் சந்தித்த போலீசார் தகவலை தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், ஆர்கன்சாஸ், நியூ எடின்பர்க் பகுதியைச் சேர்ந்த 44 வயதான டிராவிஸ் யூஜின் போஸி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதிகாரிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மூன்று கொலை வழக்குகளில் மாநில போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு மளிகைக் கடைக்குள் நடந்ததா அல்லது வெளியில் நடந்ததா என்பதை போலீஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. போஸியின் துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் உள்ள நோக்கத்தையும் பற்றி திவீரமாகி விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து ஆர்கன்சாஸ் மாநில காவல்துறை இயக்குனர் மைக் ஹாகர் கூறுகையில் “துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடந்து மூன்று பேர் இறந்துவிட்டனர் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். துப்பாக்கிச் சூடு சண்டையில் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர். சந்தேக நபரும் சுடப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

5 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

7 hours ago