Arkansas [File Image]
அமெரிக்கா : ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்டைஸில் உள்ள மளிகைக் கடைக்கு வெளியே வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் எனவும் தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் உள்ள அவர்களின் நிலைமைகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று செய்தியாளர் சந்தித்த போலீசார் தகவலை தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், ஆர்கன்சாஸ், நியூ எடின்பர்க் பகுதியைச் சேர்ந்த 44 வயதான டிராவிஸ் யூஜின் போஸி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதிகாரிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மூன்று கொலை வழக்குகளில் மாநில போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு மளிகைக் கடைக்குள் நடந்ததா அல்லது வெளியில் நடந்ததா என்பதை போலீஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. போஸியின் துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் உள்ள நோக்கத்தையும் பற்றி திவீரமாகி விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ஆர்கன்சாஸ் மாநில காவல்துறை இயக்குனர் மைக் ஹாகர் கூறுகையில் “துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடந்து மூன்று பேர் இறந்துவிட்டனர் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். துப்பாக்கிச் சூடு சண்டையில் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர். சந்தேக நபரும் சுடப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…