Categories: உலகம்

US Green Card : சுமார் 4 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக காத்திருந்து உயிரிழக்க கூடும்.! வெளியான அமெரிக்க ஆய்வறிக்கை.!

Published by
மணிகண்டன்

ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டில் தங்கி வேலை செய்வதற்காக நிரந்தரமாக குடியேறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. எல்லா நாட்டிலும் பொதுவாக பிறப்பால் குடியுரிமை வழங்கப்படும். அதனைத் தவிர்த்து நீண்ட ஆண்டுகள் அங்கு வேலை செய்தாலோ அல்லது அந்த நாட்டின் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தாலோ குடியுரிமை வழங்கப்படும்.

அப்படி வெளிநாட்டில் வேலை செய்ய நினைக்கும், செய்து வரும் பலரது கனவாக இருப்பது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவது தான். பொருளாதாரத்தில் முன்னேறிய அமெரிக்காவில் கொடுக்கப்படும் கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமையானது, அமெரிக்காவில் கால வரையின்றி தங்கி வேலை செய்வதற்கு நிரந்தர உரிமை தருகிறது. இதனை பெறுவதற்கு விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் குவிந்து வருகிறது.

ஆனால் அந்நாட்டு சட்டதிட்டத்தின் படி குறிப்பிட்ட ஒவ்வொரு ஆண்டிற்கும் குறிப்பிட்ட அளவின்படியே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றவை காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கப்படும் அவை மீண்டும் பரிசீலக்கப்படும்.  இது பற்றிய ஒரு ஆய்வு அறிக்கையை அண்மையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்டது. அதில் நடபாண்டில் இதுவரை 1.8 மில்லியன் நபர்கள் கிரீன் கார்டு வேண்டி விண்ணப்பித்ததாக குறிப்பிடபட்டுள்ள்ளது.

ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அந்நாட்டு மக்கள் தொகையில் 7%  பேர் மட்டுமே கிரீன் கார்டு வைத்து இருக்க முடியும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.7 லட்சம்  பேரில் சுமார் 80 ஆயிரம் பேரின் மனுக்கள் நிலுவையில் உள்ளன என்றும், அவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் விண்ணப்பித்து உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தாண்டு 13 லட்சம் விண்ணப்பங்கள் காத்திருப்பு பட்டியலிலும் 2.89 லட்சம் விண்ணப்பங்கள் ஆவணங்கள் சரிபார்ப்பிலும் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் கூற்றுப்படி 4.24 லட்சம் விண்ணப்பதாரர்கள் தங்களது கிரீன் கார்டுகளுக்காக காத்திருந்து தங்கள் ஆயுள் முழுவதையும் வீணடிக்க கூடும் என்றும், அதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago