Categories: உலகம்

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு.!

Published by
கெளதம்

பாகிஸ்தான் நாட்டின் மீது கடந்த செவ்வாய் அன்று இரவு ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இன்று எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளது பாகிஸ்தான். ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பாகிஸ்தான், ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது.

தற்பொழுது, இந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் 3 பெண்கள் என மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை, ஈரான் தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தியதில், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி!

ஏற்கனவே, மத்திய கிழக்கில் ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் மற்றும் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது ஈரான் – பாகிஸ்தான் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

20 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

2 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago