Categories: உலகம்

ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..!

Published by
murugan

உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கோரோடில் ரஷ்ய போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் எஸ்-300 ஏவுகணை மூலம் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விமானத்தில் 65 உக்ரைன் போர்க் கைதிகள், ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த போர் கைதிகள் உக்ரைனில் நடந்து வரும் போரின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவத்தால் பிடிக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம் Ilyushin-76 ஆகும். 65 உக்ரைன் போர்க் கைதிகள் உயிரிழந்ததை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணத்தை ரஷ்யா இதுவரை தெரிவிக்கவில்லை. விபத்துக்குள்ளனா பெல்கொரோட் பகுதி உக்ரைன் எல்லையை ஒட்டி உள்ளது.

அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு..!

உக்ரைன் ராணுவமும் இந்த பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு பெல்கோரோடில் உக்ரைன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட ரஷ்ய மக்கள் கொல்லப்பட்டனர். Ilyushin-76 என்பது , இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை விமானத்தில் ஏற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இராணுவ போக்குவரத்து விமானமாகும். இந்த விமானத்தில் 90 பேரை ஏற்றிச் செல்ல முடியும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்று உக்ரைன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பெல்கோரோட் எல்லைப் பகுதியில் ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். மேலும், ரஷ்யர்கள் உக்ரைன் கைதிகளின் வாழ்க்கை, அவர்களின் உறவினர்களின் உணர்வுகளில் விளையாடுகிறார்கள் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

7 minutes ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

9 minutes ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

35 minutes ago

என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு.., விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு.!

சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…

1 hour ago

டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம் : இளம் வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின்.!

இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…

1 hour ago

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

15 hours ago