IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

நாளை டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், விக்கெட்டுகளை வீழ்த்துவதே எங்களது முக்கிய இலக்கு என்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியிருக்கிறார்.

Shubman Gill - Test Cricket

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி  நாளை மாலை 3:30 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டியில் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, வெற்றி பெறவே முனைப்பு காட்டும்.

அதே நேரத்தில் சொந்த மண்ணில் தோற்பதை இங்கிலாந்து விரும்பாது. கடைசியாக 2007-ராகுல் ட்ராவிட் இவர்களின் தலைமையில் தான் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இந்த வரிசையில் இந்திய அணியின் இளம் தலைவர் சுக்மான் கில் இடம்பெறுவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த போட்டிக்கு முன்னதாக, இந்தியாவின் புதிய டெஸ்ர் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது களத்திற்கு செல்லும் போது பேட்ஸ்மேனாக செல்லுவேன் என்றும் பேசியுள்ளார். கேப்டன்சி குறித்து பேசிய சுப்மன் கில், எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தாமல் டெஸ்ட் போட்டியில் வெல்ல முடியாது.

நாம் எவ்வளவு ரன்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை எப்படி எடுப்பது என்பதே தற்போது எங்களது முக்கிய ஆலோசனை. இந்திய டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருப்பது எனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். இது ஒரு வீரருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மரியாதை.

இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்ய செல்லும்போது நான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட விரும்புகிறேன். கேப்டன் பதவியைப் பற்றி யோசிக்க விரும்பவில்லை, அது என் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்